மனித உரிமை விவகாரத்தில் பாரபட்சமான அணுகுமுறை ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மனித உரிமை என்பதை சிலர் லாபத்திற்காக அணுகும் போக்கை கடைபிடிப்பதாக கூறினார். ஒரு சம்பவத்தில் மனித உரிமை மீறலைப் பார்க்கும் சிலர், மற்றொரு சம்பவத்தில் அதை கண்டுகொள்வதே இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய மனப்பாங்கு மனித உரிமைகளை வெகுவாக பாதிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அரசியல் லாப நோக்கங்களுக்காக மனித உரிமைகளை அணுகும்போது, மனித உரிமையுடன் ஜனநாயகமும் பாதிக்கப்படுகிறது என்றும் பிரதமர் கூறினார். ஏழைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி பட்டியலிட்டார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!