கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு தான் தொடர்ந்து ஆதரவளிக்க உள்ளதாக மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.
மதுரையில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “வன்முறை மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அம்பேத்கரின் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். குறிப்பாக மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “கக்கூஸ் ஆவணப்படத்தில் இந்த நடைமுறை இருப்பதை சுட்டிக்காட்டிய திவ்யபாரதி மீது நடவடிக்கைகள் எடுத்து இருப்பது வேதனை அளிக்கிறது. திவ்யபாரதிக்கு தொடர்ந்து நான் ஆதரவு அளிப்பேன். கக்கூஸ் ஆவணப்படம் சாதாரண மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. சாதீய கட்டமைப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்” என்று இரோம் ஷர்மிளா கூறினார்.
அதோடு, தனது திருமணம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொடைக்கானலில் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!