விஜய் படத்தைப் பற்றி கருத்துச் சொன்னதற்காக தன்னை ட்விட்டரில் ஆபாசமாக விமர்சித்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் விஸ்வநாதனை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்த அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தன்யா, நடிகர் விஜயின் சுறா படம் குறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டதற்காக விஜயின் ரசிகர்கள் என கூறப்படும் நபர்கள் தன்னை ஆபாசமாகத் திட்டியதாக தெரிவித்தார். சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய பின்னரும் கடுமையான சொற்கள் மற்றும் ஆபாச கருத்துக்களை அந்த நபர்கள் வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை