கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் ஏழு குழிகளும், அகரத்தில் எட்டு குழிகளும் கொந்தகையில் நான்கு குழிகளும், மணலூரில் மூன்று குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை உறைகிணறுகள், வெள்ளி நாணயம், பவளம், உழவுக்கருவிகள், பானைகள், பானைஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழக அரசு கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து பார்வையாளர்கள் தனிமனித இடைவெளியுடன் வந்து அகழாய்வு தளங்களை பார்வையிட்டு செல்கின்றனர்.
அகழாய்வு தளங்களில் பானைகள், பானைஓடுகள், உறைகிணறுகள் உள்ளிட்டவைகள் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. வெள்ளி நாணயம் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!