நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கடந்த ஆண்டு பிப்ரவரி வெளியாகி பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்சன், நிரஞ்சனி அகத்தியன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள்.
தனது முதல் படத்திலேயே ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்திருந்தார் இயக்குநர் தேசிங். அடுத்தப் படம் எப்போது இயக்குவார் என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் ரஜினிகாந்த். அதற்கடுத்ததாக, தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெளியானபோது நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங் பெரியசாமியை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!