இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து இங்கிருந்து கனடா செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து வெளிநாட்டுக்கு செல்ல முடியாதவர்கள், கள்ளத் தோணியில் தூத்துக்குடிக்கு வந்து கனடா செல்ல திட்டமிட்டிருப்பதாக தமிழகத்தின் க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய க்யூ பிரிவு காவலர்கள் மதுரையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 27 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 38 பேர் கர்நாடக மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தமிழக க்யூ பிரிவு காவல் துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தேடுதல் வேட்டையை தொடங்கிய கர்நாடக காவல் துறையினர், மங்களூருவில் தங்கியிருந்த 38 பேரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து மதுரை, மங்களூர் ஆகிய பகுதிகளுக்கு பிரிந்து சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்