மத்தியப் பிரதேசத்தில் வியாபம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியாபம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரவீன் யாதவ் மத்தியப் பிரதேசத்தின் மொரேனா பகுதியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வியாபம் வழக்கில் பிரவீன் மீது கடந்த 2012ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வியாபம் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததிலிருந்து இதுவரை வழக்கில் தொடர்புடைய 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில், குற்றம்சாட்டப்பட்டவர்களும் வழக்கின் முக்கிய சாட்சிகளும் அடங்குவர். இந்த வழக்கு தொடர்பாக புலனாய்வில் ஈடுபட்ட ஊடகவியலாளர் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேச அரசுப் பணிகளுக்கு தேர்வு நடத்தும் அமைப்பான வியாபம் நடத்திய 13 தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகள் குறித்து தகவல்கள் 2000 ஆம் ஆண்டு முதலே வெளிவந்தன. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகே இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!