சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மாவோயிஸ்டுகளால் ஏப்ரல் 3ஆம் தேதி கடத்தப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 3ஆம் தேதி சத்தீஸ்கரில் நடந்த மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து ஜம்முவைச் சேர்ந்த கோப்ரா கான்ஸ்டபிள் ராகேஸ்வர் சிங் என்பவரை கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள், ``கான்ஸ்டபிள் ராகேஸ்வர் சிங் மன்ஹாஸ் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார். அவர் எங்கள் சிறையில் இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அடுத்த அழைப்பின்போது மற்ற தகவலை தருகிறோம்" என போன் மூலம் சுக்மா மாவட்ட பத்திரிகையாளரிடம் கூறியிருந்தனர்.
அதைத்தொடர்ந்து ராகேஸ்வர் சிங்கின், மனைவியும், குழந்தையும் அவரை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பிறகு ராகேஸ்வர் சிங்கின் புகைப்படத்தை மாவோயிஸ்டுகள் வெளியிட்டனர். இந்நிலையில் கடத்தப்பட்ட ராகேஸ்வர் சிங் தற்போது மாவோயிஸ்டுகளால் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!