கொரோனா பொது முடக்கத்தால் இந்தியாவில் குடும்பங்களின் கடன் அதிகரித்துள்ள நிலையில் சேமிப்புகள் வெகுவாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான குடும்பங்களின் கடன் மற்றும் சேமிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 3 மாத கால கட்டத்தில் குடும்பங்களின் கடன் அதிகரித்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 37.1% ஆகும் என கூறியுள்ளது.
இதே போல சேமிப்புகளும் குறைந்துள்ளதாகவும் அது ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 10.4% ஆக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பொது முடக்கம் காரணமாக கோடிக்கணக்கானோர் வேலை இழந்ததும் ஊதியங்கள் குறைக்கப்பட்டதுமே இந்நிலைக்கு காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இந்த போக்கு தற்காலிகமானதே என்றும் அடுத்து வந்த மாதங்களில் நிலைமை மாறியிருந்ததாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!