ஐபிஎல் ஏலத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவை ரூ. 1 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ். இதற்கு பல முன்னாள் கிரிக்கெட் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று மினி ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. அதில் பல வெளிநாட்டு வீரர்களை அதிகமான ஏலத்தொகைக்கு எடுத்தது ஐபிஎல் அணிகள். பல வெளிநாட்டு வீரர்களை 5 கோடிக்கு மேல் ஐபிஎல் அணிகள் ஏலம் எடுத்தது. உதாரணத்துக்கு கிறிஸ் மோரிஸ் ரூ.16 கோடிக்கும், மேக்ஸ்வெல் ரூ.14 கோடிக்கும், இன்னும் சிலர் ரூ.10 கோடிக்கு அருகேயும் சென்றனர். ஓப்பீட்டு அளவில் சில இந்திய வீரர்களுக்கு மட்டுமே ரூ.5 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டனர்.
இந்தியாவின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவை ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஏலத்தில் மற்ற அணிகள் எதுவும் அவரை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் ஆசிஷ் நெஹ்ரா "எப்படி விளையாடுவார்கள் என தெரியாத வெளிநாட்டு வீரர்களை அதிக விலை கொடுத்த வாங்குகிறார்கள்" என சாடியிருக்கிறார்கள்.
முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் "உமேஷ் யாதவ்வை ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது" என்றார். கிரிக்கெட் வரணனையாளரான ஹர்ஷா போக்லே "உமேஷ் யாதவ் ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்து இருக்கிறார்" என்றார் வேடிக்கையாக.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?