வன்முறையைத் தூண்டும் விதமான கருத்துகளை பதிவிட்ட ட்ரம்ப்பின் கணக்கை முடக்கிய பின்னர், ட்விட்டரில் இருந்து அவரின் ஆதரவாளர்களின் கணக்குகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களில் ஒரு கும்பல் அமெரிக்க நாடாளுமன்றம் மீது வன்முறை தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த சதித்திட்டத்துடன் தொடர்புடைய 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிறுத்திவைத்ததாக ட்விட்டர் நேற்று அறிவித்தது.
"வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிட்ட ட்ரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைத்த சிறிது நேரத்திலேயே, ட்விட்டர் சமூக வலைப்பின்னல் அதன் தூய்மைப்படுத்தலைத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை முதல் நடந்த எங்கள் முயற்சிகளின் விளைவாக 70,000 க்கும் மேற்பட்ட கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஒரு தனி நபர் பல கணக்குகளை இயக்கும் பல நிகழ்வுகளையும் கண்டறிந்தோம்" என ட்விட்டர் தெரிவித்தது.
நவம்பர் 3-ஆம் தேதி வெளியான அமேரிக்க தேர்தலின் முடிவை ஏற்க மறுத்து, ஆதாரமற்ற தகவல்களை பரப்பிய ட்ரம்பின் கணக்குகளை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளன. இந்த இரு தளங்களும் எதிர்கால வன்முறை அபாயத்தைக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ஜனவரி 20 அன்று பைடன் பதவியேற்பதற்கு முன்பு, ஜனவரி 17 ம் தேதி அமெரிக்க கேபிடல் மற்றும் ஸ்டேட் கேபிடல் கட்டடங்கள் மீது இரண்டாவது தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக இவை கூறியது.
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்