இன்று சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறினார்.
பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது, “தமிழகத்தில் இந்தாண்டு புதிய புரட்சி ஏற்படும். கொரோனாவை விட கொடிய வைரஸ் திமுக. அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு. ஆனால் கோஷ்டி சேர்க்கும் ஆட்களே இல்லை.
இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் எந்த இயக்கமும் அடையாத வெற்றியை அதிமுக பெற வேண்டும். மனமாச்சரியங்களை களைந்து, வேறுபாடுகளை மறந்து கட்சியின் வெற்றிக்கு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.
கட்சிக்கு விசுவாசமாக இருங்கள். ஒற்றுமையுடன் செயல்படுங்கள். இங்கு யாரும் யாருக்கும் அடிமையில்லை. யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்” என்றார்.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு