செங்குன்றத்தில் 4 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடத்த முயன்ற 2 பேரை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் கொக்கைன் போதைப்பொருளை சிலர் கடத்திச் செல்வதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் செங்குன்றம் காவாங்கரை பகுதியில் கண்காணித்தனர். அப்போது பைக்கில் சென்ற 2பேரை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் 4 கிலோ மெத்த பெட்டமைன் போதைப்பொருள் மறைத்து வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் இருவரும் செங்குன்றத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் கணேஷ் என்பது தெரிந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பேரும் மெத்த பெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த குற்றப்புலனாய்வு போலீசார், அதன் மதிப்பு இந்திய ரூபாயில 13 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர். பின்பு அவர்கள இருவரையும் மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
2 பேரையும் கைது செய்த மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், அவர்களிடம் போதைப்பொருளை யார் கொடுத்தது? எப்படி இலங்கைக்கு கடத்த உள்ளீர்கள்? கூட்டாளிகள் யார்? எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு