விசாரணைக்காக காவல்நிலையம் ஆஜரான நபர் உயிரிழப்பு. உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது போலீசாரின் துன்புறுத்தலா என விசாரணை நடைபெறுகிறது.
சென்னை பழைய பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்த ஏழுமலை (62) என்பவரின் மகன் நித்தியானந்தம். கடந்த ஒன்றாம் தேதி அப்பகுதியில் பூமிக்கடியில் கேபிள் பதிக்கும் பணியை பல்லாவரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஹரிஹரன் (38) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நித்தியானந்தத்துக்கும் இளநிலை பொறியாளருடன் வாக்குவாதம் ஏற்பட்ட தகராறில் நித்தியானந்தம், இளநிலை பொறியாளரை தாக்கியதாக பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து நித்தியானந்தம் தலைமறைவாகி விட்ட நிலையில், அவரது தந்தை ஏழுமலையை பல்லாவரம் போலீசார் தினந்தோறும் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்து வந்தனர். சி.எஸ்.ஆர் மட்டும் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு தினங்களுக்கு முன்னர் வழக்குப்பதிவு செய்தனர்.
இன்று வழக்கம் போல் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான ஏழுமலை விசாரணையின் போதே காவல் நிலையத்தில் வாந்தி எடுத்து சற்று நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு