மாங்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உதவி இயக்குனர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ரா(25), வளசரவாக்கத்தில் தங்கி சினிமாத் துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இன்று புத்தாண்டு பிறந்ததையடுத்து அதனை கொண்டாடுவதற்காக நள்ளிரவு போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள உதவி இயக்குனர் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்கள் குருசஞ்சய், ராம்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்தி கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி உள்ளார்கள். அப்போது மணிகண்டனுக்கும், ருத்ராவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மணிகண்டன் ஆபாசமாக பேசியதால், ருத்ரா கையில் அணிந்திருந்த மோதிரத்தால் முகத்தில் குத்தியதில் மணிகண்டன் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.
தன்னை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து ருத்ராவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ருத்ராவை அவரது நண்பர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதால் உதவி இயக்குனரை மற்றொரு உதவி இயக்குனர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்