இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் ஓப்போ நிறுவனத்தின் புதுவரவான ரெனோ 5 புரோ 5ஜி போன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் சீனாவில் இந்த போன் அறிமுகமாகி இருந்தது. இந்திய தர நிர்ணய ஆணையத்தின் இணையதள பக்கத்தில் இந்த போனின் மாடல் நெம்பர் பட்டியலிடப்பட்டுள்ளதை வைத்து இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டில் இந்த போன் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
“துல்லியமான வீடியோக்களை படம் பிடிக்க உதவும் ஸ்மார்ட் போன் விரைவில். நிறைய பேசலாம். நிறைய தெரிந்து கொள்ளலாம்” என இந்த 5ஜி போனின் வருகை குறித்து மறைமுகமாக சொல்லும் வகையில் ட்வீட் செய்திருந்தார் ஓப்போ இந்தியாவின் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு தலைவர் தஸ்லீம் ஆரீப்.
ஆண்டராய்ட் 11இல் இயங்கும் இந்த ரெனோ 5 புரோ 5ஜி போனில் 8ஜிபி முதல் 12ஜிபி வரை ரேம் இருக்கலாம் என தெரிகிறது. 4350 மில்லியாம்ப் பேட்டரியோடு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரியர் சைடில் நான்கு கேமிராவும், முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமிராவும் இடம் பெற்றுள்ளது. 128ஜிபி மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் இருப்பதாக தெரிகிறது.
#Innovation #Technology #5G
So much to talk, so much to know! Watch this space for something big coming soon??
Followed by some exciting and surprising gifts too?? pic.twitter.com/oNVf15QPQF— Tasleem Arif ?? (@tasleemarifk) December 21, 2020Advertisement
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு