தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கை மதிப்பீடு முறைகேடு வழக்கில் BARC அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரோமில் ராம்கரியாவை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.
தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் TRP நடைமுறையில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் முறைகேடு செய்து ஆதாயம் பெற்றதாக மும்பை காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. பார்வையாளர் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட வீட்டினருக்கு பணம் தந்து குறிப்பிட்ட சேனலை மட்டும் ஓட வைத்து பார்வையாளர் மதிப்பீட்டு புள்ளிகளை உயர்த்தியதே இந்த முறைகேட்டின் சாரம்சமாகும்.
இவ்வழக்கில் ஏற்கெனவே ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஞ்ச்சந்தானி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனமான BARC-இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரோமில் ராம்கரியாவுக்கு இம்முறைகேட்டில் தொடர்புள்ளதாக கூறி கைது செய்துள்ளனர்.
மதுரை எய்ம்ஸ்: முரண்பட்ட கருத்தை மாறி மாறி தெரிவித்த முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர்
இவ்வழக்கில் மும்பை காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்படும் 14ஆவது நபர் ரோமில் ராம்கரியா ஆவார். எனினும் இவ்வழக்கில் தங்கள் மீதான குற்றச்சாட்டை ரிபப்ளிக் தொலைக்காட்சி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?