ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சரிய விடுகிறது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி இரவு பகல் ஆட்டமாக அடிலெய்ட் நகரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பிரித்திவ் ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
முதல் ஓவரை சந்தித்த பிரித்திவ் ஷா 2-வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் கோலி. இந்த இணை ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சமாளித்து மிக நிதானமாக ரன் குவித்தது. புஜாரா 160 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்துள்ளார்
சற்று முன்பு வரை 50 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் சேர்த்துள்ளது.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு