விவேகம் ஷூட்டிங்கில் நடந்த அனுபவங்களையும், அஜீத்துக்கு ஏற்பட்ட சிரமங்களையும் பகிர்ந்து கொள்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான வெற்றி.
’பல்கேரியாவில் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது ஒருநாள் முக்கியமான காட்சியை படமாக்கினோம். அங்குள்ள மக்கள் அப்போது மழை வரப்போவதாக கூறினர். ஆனாலும் அந்தக் காட்சியை அன்றே எடுத்தாக வேண்டும். அன்று வியாழக்கிழமையும் கூட... என்ன செயவதென்று எங்களுக்குப் புரியவில்லை. மழை வந்துவிடக்கூடாது என அனைவரும் வேண்டினோம். எங்கள் வேண்டுதல் பலித்தது. நாங்கள் எடுக்க வேண்டிய அனைத்துக் காட்சிகளையும் ஷூட் செய்து முடித்து விட்டுக் கிளம்பிய பிறகே மழை பெய்யத் தொடங்கியது. அதேபோல மற்றொரு முக்கிய சம்பவத்தை சொல்லியே ஆக வேண்டும். 10 டிகிரி வெப்ப நிலையில் தான் பல்கேரியாவில் ஷூட்டிங்க் முழுவதும் நடந்தது. கடும் குளிர். படக்குழுவினர் அனைவரும் பனியை தாங்கிகொள்ளும் அளவிற்கு எங்கள் உடம்பை மறைத்துக் கொண்டோம். ஆனாலும் பனி வாட்டியது. அஜீத் சார் அந்தக் குளிரிலும் பல காட்சிகளில் கிழிந்த சட்டையோடு மட்டுமே நடித்தார். 10 டிகிரி குளிர்ச்சியில் மற்றவர்கள் யாரும் இப்படி நடித்திருக்க மாட்டார்கள். அத்தனை சிரமங்களையும் தங்கிக் கொண்டு சிறப்பாக நடித்தார். ஷாட் முடிந்த உடன் நடுங்க ஆரம்பித்து விடுவார் அஜீத்’ என்கிறார் வெற்றி.
விவேகம் படத்தின் படப்ப்டிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது. தற்போது போஸ்ட் ப்ரடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?