பாலாற்றில் குளிக்கச் சென்ற 16 வயது சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாதிக்பாஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனிப். கூலித் தொழிலாளியான இவருடைய (16) வயது மகன் முன்வர் மற்றும் இவருடைய நண்பன் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த தப்ரிஸ் (14) ஆகிய இருவரும் மேல்விஷாரம் பகுதியில் செல்லும் பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
குளிக்கச் சென்ற 2 சிறுவர்களும் ஆற்றில் அடித்துச்சென்ற நிலையில் தப்ரீஸ் சில தூரம் ஆற்றில் தண்ணீரில் அடித்துச் சென்ற பின்னர் பொதுமக்கள் அவனை மீட்டு உள்ளனர். ஆனால் முன்வரை மீட்க முடியாமல் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான். இவனை கடந்த ஐந்து மணிநேரமாக ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினரால் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஆற்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை