வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார் நிலையில் இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் என்றால், ஊரில் இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அதுபோல தபால்வாக்கு என்பது அனைவருக்குமானது அல்ல. தொழில் ரீதியாகவோ, படிப்புக்காகவோ இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். அப்படி, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களின் ஓட்டுகள் எப்போதும் வீணாகவே போகின்றன. இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்ய இயலுமா என மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
அதில், உரிய சட்ட விதிமுறைகள் கொண்டுவரப்பட்டால் வெளிநாடு வாழ் இந்தியர்களை இந்திய தேர்தல்களில் வாக்களிக்க வைப்பது சாத்தியம்தான் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மின்னணு முறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க முடியும் என தெரிவித்துள்ளது. உரிய நம்பகத்தன்மையுடன் இது சாத்தியமானால் வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்களது ஜனநாயகக் கடைமை நிறைவேற்றுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?