2020ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது.
சூரியனுக்கும் சந்திரனக்கும் இடையே பூமி வந்து ஒரே நேர்கோட்டியில் இருக்கும் போது பூமியின் நிழலானது சந்திரன் மேல் விழுந்து சந்திரனை மறைக்கும். இந்த நிகழ்வையே சந்திரகிரகணம் எனக் கூறுகிறோம். இந்த ஆண்டு ஜனவரி, ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்கெனவே 3 சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. அதன்படி இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது.
இன்றைய சந்திரகிரகணம் பெனும்பிரல் சந்திரகிரகணமாகும். இது வழக்கமான சந்திரகிரகணத்தை விட அதிக நேரம் நீடிக்கும். இந்தியாவிலும் கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் இது நிகழும். ஆனால் இன்றைய சந்திரகிரகணம் இந்தியாவில் தெரியாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சில இடங்களில் இது தெரிய வாய்ப்புள்ளது. ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும் (Source: timeanddate.com) எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கு இன்றைய சந்திரகிரகணம் கடைசி என்பதால் அடுத்த சந்திரகிரகணம் 2021ம் ஆண்டு மே 26ம் தேதி நடைபெறவுள்ளது.
Loading More post
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
'இந்திய வீரர்கள் மீதான இனவெறி கருத்து': தீவிர விசாரணையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி