சென்னையில் நவ.21ஆம் தேதி ரூ. 67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளார்.
அதில் ரூ.61,843 கோடியிலான சென்னை மெட்ரோ ரயில் திட்ட 2ஆம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் திருவள்ளூர் தேர்வாய்கண்டிகையில் ரூ.400 கோடியில் அமைத்த புதிய நீர்தேக்கத்தை அர்ப்பணிக்கவுள்ளார்.
மேலும், பல்வேறு உள் கட்டமைப்பு திட்டங்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளார். கரூர் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், கோவை-அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத்திட்டம், காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்குதளம் உள்ளிட்ட திட்டங்கள், வல்லூரில் ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலியமுனையத்திற்கும் அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளார்.
நவம்பர் 21ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி