இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தால் என்ன கோலியால் பெங்களூருக்கு வெற்றியை தேடி தர முடியவில்லையே என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது பெங்களூர். இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து பெங்களூர் வெளியேறியது. இந்நிலையில், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர் ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்துக்கு பேசியுள்ளார்.
அதில் "எத்தனை காலத்துக்குதான் பிளே ஆஃப்க்கு தகுதிப்பெற்றுவிட்டோம் என கூறிக்கொண்டே இருக்க முடியும். என்னை பொறுத்தவரை ஆர்சிபி அணி பிளே ஆஃப்க்கு தகுதிப்பெற தகுதியில்லாத அணியாகவே பார்க்கிறேன்" என்றார்.
மேலும் "ஐபிஎல் தொடரின் கடைசி 5 போட்டிகளில் ஆர்சிபி தோல்வியடைந்ததையும் நாம் மறுக்க முடியாது. இந்தத் தொடரில் ஆர்சிபிக்கு நவ்தீப் சைனி மட்டுமே சிறப்பாக விளையாடி இருக்கிறார். எனக்கு தெரிந்தவரையில் வேறு எந்த வீரரும் இந்தத் தொடரில் ஆர்சிபிக்கு சிறப்பானவராக தோன்றவில்லை.
8 ஆண்டுகள் என்பது சாதாரண விஷயமல்ல. கோலிக்கு அனுபவமில்லை என கூறவில்லை. இந்தியாவுக்கு கேப்டனாக இருக்கிறார். எந்த அணிக்கு விளையாடினாலும் அவர்தான் கேப்டன். இவையெல்லாம் சரிதான். ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீங்கள் வெற்றியை கொடுக்க வேண்டும். அதான் விளையாட்டில் முக்கியம்" என்றார் கவுதம் காம்பீர்.
மேலும் பேசிய அவர் "கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி முடிவு செய்திருந்தால் தொடரின் முதல் போட்டியிலிருந்தே அவர் தொடக்க வீரராக விளையாடி இருக்க வேண்டும். அப்படி முன்கூட்டிய திட்டமிட்டுருந்தால் அதற்கேற்ப மிடில் ஆர்டரை தயார் செய்திருக்க வேண்டும். ஆனால் வழக்கம்போல இந்தத் தொடரிலும் கோலியும், டிவில்லியர்ஸூம்தான் பல நேரங்களில் அணியை காப்பாற்றினர்" என்றார் காம்பீர்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?