'ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான' உள்ளடக்கத்தை தடுக்க தவறியதற்காக தடை விதிக்கப்பட்டிருந்த டிக்டாக் மீதான தடையை நீக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
"ஆபாசத்தையும் ஒழுக்கக்கேட்டையும் பரப்புவதில் ஈடுபடும் அனைத்து கணக்குகளும் தடுக்கப்படும் என்று, டிக்டாக் நிர்வாகம் உறுதியளித்தபிறகு இந்த செயலி மீதான தடை நீக்கப்படுகிறது" என்று பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ) ட்வீட் செய்துள்ளது."ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான" உள்ளடக்கத்தைத் தடுக்க தவறியதற்காக பாகிஸ்தான் அரசு, டிக்டாக் மீது 10 நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. சட்டவிரோத உள்ளடக்கத்தை தடுக்க நிறுவனம் தயாராக இருந்தால், டிக்டாக்குடன் கலந்துரையாடலுக்கு திறந்திருப்பதாக பி.டி.ஏ ஏற்கெனவே கூறியிருந்தது.
பாகிஸ்தானில் சுமார் 20 மில்லியன் டிக்டாக் பயனர்கள் உள்ளனர். கடந்த 12 மாதங்களில் பாகிஸ்தானில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மூன்றாவது பயன்பாடாக டிக்டாக் உள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்