உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கையை அரசு வழக்கறிஞர்கள் மேற்கொள்ளவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு 8-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் வருகிற 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆணையத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான மனுவையும், நீதிமன்றம் விதித்த தடை ஆணையை நீக்குவதற்கான மனுவையும் அரசு வழக்கறிஞர்கள் உரிய நேரத்தில் தாக்கல்செய்யவில்லை குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!