கர்நாடகாவில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில கல்வித்துறை அக்டோபர் 12 முதல் மூன்று வாரங்களுக்கு இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் விடுப்பு வழங்கப்படும், ஆன்லைன் வகுப்புகளும் இந்த மூன்றுவாரம் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக பள்ளிக்கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் இடைக்கால விடுமுறைகளை (தசரா விடுமுறைகள்) ரத்து செய்வதாக அறிவித்த 10 நாட்களுக்குப் பிறகு மாநில அரசு இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.
கோவிட் -19 தொற்றுநோயால் வகுப்புகள் மற்றும் வித்யகம திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார். "பல ஆசிரியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 12 முதல் அக்டோபர் 30 வரை மூன்று வார விடுமுறை விடப்பட்டுள்ளது" என்று அவர் உத்தரவிட்டார். மேலும் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்கூட்டியே மகிழ்ச்சியான தசரா வாழ்த்துகளையும் தெரிவித்தார். அக்டோபர் 15 க்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யவிருந்தது, இந்த முடிவால் அது தள்ளிப்போயுள்ளது.
Loading More post
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்