உத்தரபிரதேசத்தில், மனைவியை சந்தேகித்த கணவர், அவர் தலையை துண்டித்து கையில் ஏந்தியபடியே 2 கிமீ நடந்துசென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கின்னர் யாதவ்(40 வயது) என்ற நபர் காலை நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது அவர் மனைவி விமலா (35 வயது), பக்கத்து வீட்டுக்காரரான ரவிகாந்த் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.
இதைப் பார்த்து கோபமடைந்த யாதவ், காந்துடன் சண்டைப் போட்டு, அவரை தாக்கியிருக்கிறார். அதைத் தடுக்கவந்த தனது மனைவிமீது ஆத்திரமடைந்த அந்த நபர், அருகிலிருந்த கோடரியை எடுத்து தனது மனைவியின் தலையை துண்டித்திருக்கிறார். அந்த தம்பதியின் இரண்டு மகன்களும் அப்போது வீட்டில் இல்லை.
மனைவியின் தலையை கையில் ஏந்தியபடியே 2 கிமீ தொலைவில் உள்ள பபேரு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். 15 நிமிடம் காவல் நிலையத்தில் மனைவியின் தலையை கையில் ஏந்தியபடியே அமர்ந்திருந்த யாதவை போலீஸார் கைது செய்து, இந்திய சட்டப்பிரிவு 302(கொலை)இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆசிரியை தாக்கியதால் காயமடைந்த மாணவர் உயிரிழப்பு?
விசாரணையில், தனது மனைவிக்கு பக்கத்துவீட்டுக்காரரான எலக்ட்ரீஷியன் ரவிகாந்துடன் தொடர்பு இருப்பதாக தான் சந்தேகித்ததாகவும், இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டிருந்ததை தான் பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தான் வீட்டில் இல்லாத நேரத்தில் ரவிகாந்த் தன்னுடைய வீட்டிற்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்