தமிழகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு தகுதியும் அனுபவமும் கொண்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின்கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில், 16 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கான தொகுப்பு ஊதியமாக ரூ. 33,250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
சமூகப் பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளர்ச்சி உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்று, அவற்றில் ஐந்து ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். நாற்பது வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.
கோப்புப் படம்
விண்ணப்பிக்கும் முறை
இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அலுவலக முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: ஆணையர் அல்லது செயலர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை - 10
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 9.10.2020
விவரங்களுக்கு: www.tn.gov.in
044 26421358
இணைய வசதிக்காக திறந்தவெளியில் ஆன்லைன் வகுப்பு: சிறுத்தையால் தாக்கப்பட்ட கல்லூரி மாணவர்
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்