சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் ஒன் மேன் ஷோவை தனது அதிரடியான இன்னிங்ஸின் மூலம் காட்டியிருந்தார்.
அதனால், ராஜஸ்தான் அணியும் சென்னை வீழ்த்தி கரை சேர்ந்தது.
சமூக வலைத்தளம் முழுவதும் சஞ்சுவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிய அனைவருக்கும் நன்றி சொல்லியவர் இதற்கெல்லாம் காரணம் ஊரடங்கு காலத்தில் தனக்கு பந்து வீசிய ரய்பி கோமஸ் தான் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அந்த பயிற்சி குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ரய்பி கோமஸ்.
“கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பயிற்சி மேற்கொள்வது சாஞ்சுவுக்கு சிக்கலானது. அதனால் நானும் அவனும் சேர்ந்து எங்கள் வீட்டு மொட்டை மாடியில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டோம்.
அதில் பவுன்சர், யார்க்கர் என பந்துவீச்சின் அத்தனை வேரியேஷனிலும் சஞ்சுவை நோக்கி சுமார் இருபதாயிரம் முறைக்கு மேல் பந்து வீசினேன். அதில் நல்ல பந்துகளை தடுத்து ஆடிய சஞ்சு, லூஸ் பால்களை டேமேஜ் செய்துவிட்டார்.
அப்படி ஒவ்வொரு நாளும் 6 முதல் 7 மணி நேரம் வரை பயிற்சி மேற்கொண்டோம். அந்த பயிற்சியும் முயற்சியும் இந்த ஐபிஎல் சீசனில் அவனுக்கு கைகொடுத்துள்ளது என நம்புகிறேன்.
அவனை 12 வயதிலிருந்து பார்த்து வருகிறேன். பிட்னஸ், டயட், பயிற்சி என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும் அவன் கோலியை ஆட்டத்தின் மூலம் கவர்ந்து இந்திய அணிக்காக கூடிய சீக்கிரம் விளையாடுவான்” என தெரிவித்துள்ளார் கோமஸ்.
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ