தொற்றுநோய் பரவலால் இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்திய பொருளாதரம் மற்றும் மக்களின் நிலையைக் கருத்தில்கொண்டு அடுத்தடுத்து இதுவரை நான்கு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஊரடங்கு செப்டம்பர் 25லிருந்து தொடங்குகிறது என ஆன்லைனில் ஸ்க்ரீன் ஷாட்டுடன் பெரிதும் பகிரப்பட்டு வந்த செய்தி போலியானது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், நாட்டில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், திட்டமிடல் ஆணையத்துடன் இணைந்து மத்திய அரசு, 46 நாட்கள் தேசிய அளவிலான ஊரடங்கை செப்டம்பர் 25ஆம் தேதியிலிருந்து அமல்படுத்த உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தவிர மற்ற அனைத்துக்கும் தடைவிதிக்க என்.டி.எம்.ஏ முன்கூட்டியே திட்டமிட உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்துவதாக தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கை முற்றிலும் போலியானது என பத்திரிகை தகவல் பணியகம்(Press Information Bureau) மறுத்துள்ளது. மேலும் ஊரடங்கை அமல்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசை எந்தவிதத்திலும் வலியுறுத்தவில்லை எனவும் பிஐபி தெரிவித்துள்ளது.
உலகிலேயே இரண்டாவது அதிகம் பாதித்த நாடாக இந்தியா உள்ளது. இதுவரை 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சுமார் 90 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்திய பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஊரடங்கை தளர்த்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை அனைத்து பாதுகாப்புகளுடனும் மக்கள் இயங்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!