ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நீட் - ஜே.இ.இ தேர்வுகள் நடத்துவது தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்றை ட்விட்டரில் கேட்டிருந்தார். அவரது அழைப்புக்கு இதுவரை சுமார் 1.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிலளித்துள்ளனர்.
கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நீட் - ஜே.இ.இ தேர்வுகள் குறித்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
“குறிப்பாக வருங்கால இளம் பொறியாளர் மற்றும் மருத்துவ நண்பர்கள் அனைவரிடமிருந்தும் கருத்துக்களைக் கேட்க விரும்புகிறேன்.
நீட் - ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் மாணவர்களாகிய நீங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வீர்களா? ” என ட்வீட் செய்திருந்தார் சோரான்.
‘ஆம், இல்லை மற்றும் தெரியாது’ என மூன்று ஆப்ஷன்களோடு இந்த கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தார் அவர்.
I want to particularly ask and seek feedback from all my young engineer and doctor friends -
"" Will students face huge difficulties if #JEENEET exams are postponed ? "" — Hemant Soren (घर में रहें - सुरक्षित रहें) (@HemantSorenJMM) August 29, 2020
இதற்கு பதிலளித்த 1,76,977 பேரில் 79 சாதவிகிதத்தினர் இல்லை என பதில் தெரிவித்துள்ளனர்.
‘மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலன் குறித்து அரசுக்கு தொலைதூர அக்கறை இருப்பதாக தெரியவில்லை’ எனவும் ட்வீட் செய்திருந்தார் சோரன்.
தேர்வுகள் ஒத்திவைக்குமாறு ஹேமந்த் சோரன் மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்