இந்த தொற்றுநோய் காலத்தில் நமக்கு நோய்த்தொற்று வராமல் தடுக்க அடிப்படை வழி நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டும்தான் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வலியுறுத்தி வருகின்றனர்.
பருவகாலத்திற்கு ஏற்றவாறு உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர். இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்யத்தையும் மேம்படுத்த முடியும் என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உலர் பொருட்கள்: காலையில் ஊறவைத்த பாதாம், திராட்சை, முந்திரி அல்லது வேர்க்கடலை என பகல்நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ராகி: ராகியை மதிய உணவாக சாப்பிடலாம் அல்லது ராகி உருண்டைகளை வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதை இடைவேளைகளில் சாப்பிடலாம்.
ஊறுகாய்: எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் மாங்காய் ஊறுகாயை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.
அரிசி: அரிசி உணவு எளிதில் ஜூரணமாகும். மேலும் இதில் பி.சி.ஏ.ஏ கிளை-சங்கிலி அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் புரதச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. மதியம் அல்லது இரவு உணவிற்கு அரிசி உணவை சேர்த்துக்கொள்ளலாம்.
ஜாதிக்காயுடன் மஞ்சள் பால்: ஜாதிக்காய்ப் பொடியை சிறிது சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும். மஞ்சள்பொடி கலந்த பாலில் சிறிது ஜாதிக்காய்ப் பொடியை சேர்த்து சாப்பிட உடலுக்கு நல்லது.
Loading More post
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!