சாத்தான்குளம் சம்பவத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தந்தை - மகன் உயரிழந்த விவகாரத்தில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது வேறொரு புகாரில் கொலை முயற்சி வழக்கு பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தேனி காவல்நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கை நமது புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. அதில், அண்ணனின் மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, விஷம் வைத்து கொல்ல முயன்றதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில் 5-வது குற்றவாளியாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக ஸ்ரீதரின் அண்ணன் மகள் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியில், அதிகாரத்தை பயன்படுத்தி இதுவரை விசாரணை நடத்த விடாமல் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தடுத்து வந்ததாகவும், அவரால் தங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்