இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 15,600 பேருக்கு கொரோனா உறுதியானது. நேற்று கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 466.
ஜூன் 16-ம் தேதி 3.53 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.55 லட்சமாக உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 14,600 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதன்படி கடந்த 7 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,541 ஆகும்.
நேற்றைய ஒருநாளில் நாட்டிலேயே அதிகமாக டெல்லியில் மட்டும் 3947 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 3214 பேர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மும்பை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இதுவரை 3844 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில், சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44,205 ஆக உயர்ந்துள்ளது.
‘பிஎம் கேர்’ நிதி எதெற்கெல்லாம் செலவிடப்பட்டது? : பிரதமர் அலுவலகம் விளக்கம்
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு