கொரோனா சிகிச்சையில் இருந்த கோயம்பேடு கூலி தொழிலாளி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சின்மயா நகரைச் சேர்ந்த 43 வயது நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 12-ம்தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக மருத்துவர்கள் அவரின் முகவரியை வைத்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தலைமறைவான அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்