நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதனால் ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பல மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து அந்தந்த மாநில முதல்வர்களே உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை மத்திய அரசின் அறிவிப்பே பின்பற்றப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அப்போது ஊரடங்கின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பிரதமர் விவரிப்பார் எனத் தெரிகிறது. இந்தியா முழுவதும் ஒரே உத்தரவாக பிறப்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தியாவசிய பொருட்களை தயார் செய்யும் தொழிற்சாலைகளுக்கு ஒரு சில வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளை வகைப்படுத்தி சில தளர்வுகளை அறிவித்து ஊரடங்கு நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு