அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என நடிகர்
ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தமிழகத்தை பொருத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள், திரையரங்குகள், பெரிய கடைகள் போன்றவைகளை மூடக்கோரி
அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் மிகப்பெரிய பாதிப்பு தடுக்கப்படும் என்ற போதிலும் இத்தகையை இடங்களில் வேலை பார்த்து வரும் ஊழியர்கள்
தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
குடும்பத்தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை காணவில்லை - காவல்நிலையத்தில் புகார்
இந்நிலையில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட் விட்டர்
பக்கத்தில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு
சேர்ந்து நாமும் இணைந்து கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்.
?? pic.twitter.com/Rtz4OJmsUG — Rajinikanth (@rajinikanth) March 19, 2020
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது
பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
தொகுதி பங்கீடு : அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி