கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ரத்து செய்யப்பட்ட 155 ரயில்களில் முன்பதிவு செய்தோர், டிக்கெட்டுகளை கேன்சல் செய்யும்போது அபராதமின்றி முழுக் கட்டணமும் திருப்பி தரப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர்
எண்ணிக்கை 3 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து கொரோனா
வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கொரோனா பாதிப்பை பரிசோதிக்க அனுமதி கோரும் தனியார் நிறுவனங்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் பலர் ரயில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் 155 ரயில்களை ரத்து செய்து ரயில்வே துறை உத்தரவிட்டது.
இத்தாலியை தொடர்ந்து பிரிட்டனை அச்சுறுத்தும் கொரோனா !
இந்நிலையில், இந்த 155 ரயில்களில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்யும்போது அபராதமின்றி முழுக் கட்டணமும் திரும்பி வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 60 ரூபாய் முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்