நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் தாயார் தாக்கல் செய்த மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் தள்ளுபடி செய்தது.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோரை வரும் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக அவர்கள் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்ததால், தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போனது. ஆனால் அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் தூக்கிலிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நிர்பயா குற்றவாளிகள் தரப்பிலிருந்து சர்வதேச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் குமாரின் தாயார், தனது மகனின் தூக்கு தண்டனையை தடுக்க வேண்டும் எனக்கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த ஆணையம், தூக்கு தண்டனையை ரத்து செய்வது தங்கள் அதிகார வரம்பிற்கு வராது என்று தெரிவித்தது. இதுதொடர்பாக ஏற்கனவே பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு, இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?