கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் அந்நோயின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கல்புர்கியில் கொரோனா நோய் பாதித்த 76 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இவர் தான் கொரோனா பாதிப்புக்கு இந்தியாவில் உயிரிழந்த முதல் நபர். இவர் உயிரிழக்கும் போது கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இறந்த சில தினங்களுக்கு பிறகே உறுதி செய்யப்பட்டது. முதலில் கல்புர்கியில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர் பின்னர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்த அந்த முதியவருக்கு கல்புர்கி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த 63 வயதான மருத்துவருக்கும் இந்த நோயின் பாதிப்பு உள்ளதை அவரைப் பரிசோதனை செய்த சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த மருத்துவர் அவரது குடும்ப உறுப்பினருடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிக்கும் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது இதுவே முதல் முறை.
"வோட்கா சாப்பிட்டால் கொரோனா வராது" போதை ஆசாமியின் பேச்சால் டென்ஷன் ஆன போலீஸ் !
இது குறித்து, “அவர் குடும்பத்தினருடன் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்று அவர் தனிமை வார்டுக்கு அனுப்பப்பட உள்ளார்” என்று துணை ஆணையர் பி சரத் தெரிவித்துள்ளார். மார்ச் 6 ஆம் தேதி முதல் 9 வரை இந்த மருத்துவர் இறந்து போன நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக தெரியவந்துள்ளது. இந்த மருத்துவர் கர்நாடக மாநிலம் கல்புராகியைச் சேர்ந்தவர் என்றும் இவரைப் பரிசோதனை செய்த பின் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்.
We have got 2 more #COVID2019 cases in Karnataka taking the total number of confirmed cases to 10.
20 yr old female who travelled from UK is tested positive & another contact of P6 (kalburgi deceased patient) is tested positive. Both are admitted in designated isolation hospital— B Sriramulu (@sriramulubjp) March 17, 2020
முன்னதாக அவர் ஏன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்படவில்லை என்று சுகாதார அதிகாரிகளிடம் கேட்டபோது, முறைப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அப்போது அவருக்கு நோய்க்கான அறிகுறிகளை உருவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தின் மூலம், கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர்களின் எண்ணிக்கை 10 ஆகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
“கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மேலும் இருவர் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை 10 ஆக கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்த 20 வயது பெண் ஒருவருக்கு நடத்தப்பட்ட சோனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது” என்று கர்நாடகாவின் உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஸ்ரீராமுலு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?