கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர் சுகாதாரத்துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் அங்கீகாரம் அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சிகிச்சை வழங்கப்படுகிறது, அவர்கள் கையாளும் முறை என்ன என்பது குறித்து சர்வதேச மருத்துவர்களுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பள்ளி கல்லூரிகளில் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர் சுகாதாரத்துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் அங்கீகாரம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 129 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?