கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 வெளியீட்டில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தங்கள் புதிய உற்பத்தியான ஐபோன் 12 மாடலை ஆசியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக தங்கள் நிறுவன சோதனை பொறியாளர்களை ஆசியாவிற்கு பயணம் அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது.
இதன் எதிரொலியாக அனைத்து தொழில் நிறுவனங்களின் பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் பொறியாளர்கள் ஆசியாவிற்கு பயணிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்பிள் போனின் புதிய உற்பத்தியான ஐபோன் 12 மாடல் செல்போன் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஆசியாவில் தங்கள் பொறியாளர்கள் பயணம் மேற்கொள்வதற்காக ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் ஏப்ரல் இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் 5ஜி டெக்னாலஜி வசதி கொண்ட ஐபோன் 12 மாடல் வெளியாவதில் தாமதம் உருவாகியுள்ளது.
Loading More post
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!