கர்நாடக மாநிலம் மங்களூரில் கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
மங்களூர் விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து ஒருவர் வந்துள்ளார். அந்த நபருக்கு கடுமையான ஜூரமும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறியும் இருந்துள்ளது. இதனையடுத்து அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கான தனி வார்டில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா எதிரொலி : ‘தனி வார்டு’ அமைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்
ஆனால், அந்த நபர் மருத்துவமனை ஊழியர்களிடமும் மருத்துவர்களிடமும் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லையென வாதிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் கூறிக்கொண்டு இருந்திருக்கிறார். ஆனால், அவர் எப்படியோ இரவு நேரத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளார்.
இதனையடுத்து உஷாரான மருத்துவமனையின் அதிகாரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இப்போது மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொரோனா நடவடிக்கையில் அலட்சியம் காட்டுகிறதா விமான நிலையம் ? கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்!
இது குறித்து கருத்து தெரிவித்த தட்சிண கன்னடா மாவட்டத்தின் சுகாதாரத்துறை அதிகாரி சிகந்தர் பாட்சா, "பாதிப்பு இருப்பதாக கருதப்படும் நபர்கள் 24 மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் பின்பு பரிசோதனைகள் முடிக்கப்பட்டு அவர்களை டிஸ்சார்ச் செய்கிறோம். இது வழக்கமான நடைமுறைதான். தப்பியோடியவரை கண்டுப்பிடிக்க காவல்துறையின் உதவியை நாடியுள்ளோம்" என்றார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!