இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து இந்திய அரசு சார்பில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதிப்பிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை :
தனிப்பட்ட முறையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவுமே இருக்க வேண்டும்.
அடிக்கடி கைகளை சோப் அல்லது அதற்கு இணையான திரவங்களை கொண்டு கழுவ வேண்டும்.
இருமலோ, தும்பலோ வரும்போது முகத்தை அதற்கேற்ற துணிகளையோ, கவசங்களை கொண்டு மூட வேண்டும்.
வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் கட்டாயம் கைகளையும் கால்களையும் சுத்தமாக சோப் கொண்டு கழுவ வேண்டும்.
ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்படும் சோப் அல்லது திரவத்தை பயன்படுத்து கைகளையும் கால்களையும் சுத்தப்படுத்துவது நல்லது.
உபயோகித்த டிஷ்யூ பேப்பர்களை உடனடியாக அபு்புறப்படுத்த வேண்டும்.
தொடர்ந்து உடல்நிலை சீராக இல்லாமல் இருப்பது போல உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்கவும்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த 28 பேர் யார் யார்?
கொரோனா விவகாரத்தில் கவனக்குறைவா? இந்தியாவிற்குள் நுழைந்தது எப்படி?
செய்யக் கூடாதது ?
தொடர் இருமல் காய்ச்சல் இருப்பவர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது.
எச்சிலை பொது இடங்களில் துப்பக்கூடாது.
விலங்குகள் இடமிருந்து விலகியிருத்தல், சரியாக வேகவைக்கப்படாத இறைச்சியை உண்பதை தவிர்க்க வேண்டும்.
விலங்குகள் பண்ணைக்கு செல்வது, விலங்குகள் விற்கும் கூடங்களுக்கோ சந்தைகளுக்கோ செல்வது, விலங்குகள் மற்றும் இறைச்சிக் கூடங்களுக்கு செல்வதை அறவே தவிர்க்க வேண்டும்
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?