பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இதில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட அவர்களை மன்னித்துவிட்டார்கள். சட்டத்தின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டுமெனில் விடுவித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு அனைவருமே வந்துவிட்டோம். அரசு தன் கடமையைச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
அத்துடன், “ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின் போது 18 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும். என் தாய் உட்பட பலர் படுகாயமடைந்தனர். அந்தச் சம்பத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய உதவிகளை அரசு செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
Loading More post
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்