துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசிய கருத்தினை பார்த்துவிட்டு பின்னர் பதிலளிப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமைச்சர் பாண்டியராஜன் புதியதலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “காவல்துறை மட்டுமல்லாது, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் எந்தவிதமான அரசாணையும் தமிழில் இருக்கும். அந்த துறை விரும்பினால் ஆங்கிலத்திலும் இருக்கலாம். விரைவில் அனைத்து துறைகளிலும் தமிழில் அரசாணை வழங்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தெளிவாக உள்ளார். அனைத்து துறைகளிலும் அரசாணை தமிழில் இருக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். அதன்படி, காவல்துறை நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வு பணி வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. கீழடியில் கண்றியப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க டெண்டர் கோரும் பணி நடைபெற்று வருகின்றது. விரைவில் கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி என்ன பேசினார் என்பதை பார்த்துவித்துவிட்டு அது தொடர்பான கருத்தை பேசுகின்றேன்” என்று தெரிவித்தார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை