சேலத்தில் 4 மாத குழந்தையை 3 லட்சத்திற்கு பெண்ணின் பெற்றோர்களே விற்பனை செய்துவிட்டதாகவும், குழந்தையை மீட்டுக் தரகோரியும் இளம் தம்பதியினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
சேலத்தை அடுத்த ஆட்டையாம்பட்டியை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா - மீனா தம்பதி. இவர்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து திருப்பூரில் உள்ள பணியன் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மீனாவிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து மீனாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் குழந்தையை மீனாவின் பெற்றோரான சாந்தி மற்றும் பொன்னுசாமியிடம் ஒப்படைத்து பராமரிக்க கூறியுள்ளனர்.
ஆனால் மீனாவின் பெற்றோர்கள் 2 மாதங்களுக்கு முன்பு குழந்தையை 3 லட்சத்திற்கு சென்னையை சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. உடல்நலம் தேரியதும் மீனாவின் பெற்றோரிடம் குழந்தையை கேட்டபோது குழந்தை இல்லை எனவும் குழந்தையை வேறொருவரிடம் வளர்க்க கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தையை மீட்டுத்தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று குழந்தையின் பெற்றோரான ராஜா மற்றும் மீனாவும் குழந்தையை மீட்டு தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்தனர்.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்!
பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை - நிர்மலா சீதாராமன்
மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து: மத்திய அரசு
ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!