போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை என மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழா அவரது சொந்த ஊரான பரமக்குடி அடுத்த தெளிச்சநல்லூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் குடும்ப உறுப்பினர்களான சாருஹாசன், சுகாசினி, ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன், மற்றும் நடிகர் பிரபு, சினேகன், ஞானசம்பந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மரக்கன்றுகள் நட்டு, மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றி கமல்ஹாசன் தொடக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தந்தை சீனிவாசனின் உருவ சிலையை திறந்து வைத்து பேசிய கமல்ஹாசன், மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நிகழும் நிலை ஏற்பட்டதால்தான், தாம் அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மக்கள் நீதி மய்யத்தின் வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிலகத்தையும் கமல்ஹாசன் தொடக்கி வைத்தார். அதன் மூலம் பணித்திறனை பட்டதாரிகள் வளர்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'