வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சௌந்தர். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மூத்த மகள் அனிஷா(5).
திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி ஒரு வார காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுமியை மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அனிஷா உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுமி உயிரிழந்தது அந்த ஊர் மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்